Monday, December 29, 2014

டோனியின் 10 ஆண்டுகள்!

விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் தொடர்ந்து திறமையான நிலையில் இருந்தால்தான் அவர்களால் நீண்ட காலம் விளையாட்டில் 
நீடித்திருக்கமுடியும் என்பது எழுதப்படாத நியதி.
அந்த வகையில் உலகக் கிரிக்கெட்டில் 24 வருடங்களாக விளையாடியவர் என்ற பெருமையை முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தன் வசம் வைத்துள்ளார்.
தற்போது இந்திய அணியின் தலைவரான டோனி, தனது 10 ஆண்டு காலப் பயணத்தை பல்வேறு 
சாதனைகளுடன் நிறைவு செய்துள்ளார். 

ரியல் மார்டிட்டின் மற்றொரு இலக்கு!

சியர்களான நமக்குப் பரீட்சயமான உலக கிரிக்கெட் விளையாடும் நாடுகளைச் சேர்ந்த உள்ளூர் சம்பியன் கழகங்களுக்கிடையில் நடைபெறும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர்போன்றதொரு  உதைபந்தாட்டத் தொடர் அண்மையில் நடைபெற்று முடிந்துள்ளது.
உலகளவில் பிரபல்யமிக்க உள்ளூர் சம்பியன் கழகங்களுக்கிடையிலான இத்தொடர் கடந்த 10ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை வட ஆபிரிக்க நாடான மொராக்கோவில் நடைபெற்றது.
2000ஆம் ஆண்டு முதல் முதலாக இப்போட்டித் தொடர் பிரேஸிலில் நடத்தப்பட்டது. பின்னர் 2005ஆம் ஆண்டு இரண்டாவது தொடர்

Sunday, December 21, 2014

உத்வேகமளித்த வெற்றித்தொடர்!

தாய் மண்ணுக்கு விடைகொடுத்த இரு நட்சத்திரங்கள்
அண்மைய சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் நடைபெற்று வந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்குப் பெருந்தோல்வியை ஏற்படுத்தி, கடந்த மாதம் இந்தியாவுடன் ஏற்பட்ட படுதோல்வியிலிருந்து மீளும் வகையில் தன்னைப் புதுப்பித்துக்கொண்டுள்ளது இலங்கை அணி.
இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணி, 7 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணியை எதிர்த்து விளையாடியது.

Wednesday, December 3, 2014

தேசிய விளையாட்டு :
மேற்கின் ஆதிக்கமும் வடக்கின் பின்னடைவும்



லங்கையில் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வரும் மாகாணங்களுக்கிடையிலான தேசிய விளையாட்டுப் போட்டிகளின் 40ஆவது அத்தியாயம் அண்மையில் வட மத்திய மாகாணத்தின் தலைநகராக விளங்கும் அனுராதபுரத்தில் நடைபெற்றுமுடிந்துள்ளது.
இந்த விளையாட்டுப் போட்டிகளில் ஒன்பது மாகாணங்களிலிருந்தும் வீர-வீராங்கனைகள் பங்கேற்றனர்.

Total Pageviews