Monday, December 29, 2014

டோனியின் 10 ஆண்டுகள்!

விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் தொடர்ந்து திறமையான நிலையில் இருந்தால்தான் அவர்களால் நீண்ட காலம் விளையாட்டில் 
நீடித்திருக்கமுடியும் என்பது எழுதப்படாத நியதி.
அந்த வகையில் உலகக் கிரிக்கெட்டில் 24 வருடங்களாக விளையாடியவர் என்ற பெருமையை முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தன் வசம் வைத்துள்ளார்.
தற்போது இந்திய அணியின் தலைவரான டோனி, தனது 10 ஆண்டு காலப் பயணத்தை பல்வேறு 
சாதனைகளுடன் நிறைவு செய்துள்ளார். 

ரியல் மார்டிட்டின் மற்றொரு இலக்கு!

சியர்களான நமக்குப் பரீட்சயமான உலக கிரிக்கெட் விளையாடும் நாடுகளைச் சேர்ந்த உள்ளூர் சம்பியன் கழகங்களுக்கிடையில் நடைபெறும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர்போன்றதொரு  உதைபந்தாட்டத் தொடர் அண்மையில் நடைபெற்று முடிந்துள்ளது.
உலகளவில் பிரபல்யமிக்க உள்ளூர் சம்பியன் கழகங்களுக்கிடையிலான இத்தொடர் கடந்த 10ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை வட ஆபிரிக்க நாடான மொராக்கோவில் நடைபெற்றது.
2000ஆம் ஆண்டு முதல் முதலாக இப்போட்டித் தொடர் பிரேஸிலில் நடத்தப்பட்டது. பின்னர் 2005ஆம் ஆண்டு இரண்டாவது தொடர்

Sunday, December 21, 2014

உத்வேகமளித்த வெற்றித்தொடர்!

தாய் மண்ணுக்கு விடைகொடுத்த இரு நட்சத்திரங்கள்
அண்மைய சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் நடைபெற்று வந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்குப் பெருந்தோல்வியை ஏற்படுத்தி, கடந்த மாதம் இந்தியாவுடன் ஏற்பட்ட படுதோல்வியிலிருந்து மீளும் வகையில் தன்னைப் புதுப்பித்துக்கொண்டுள்ளது இலங்கை அணி.
இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணி, 7 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணியை எதிர்த்து விளையாடியது.

Wednesday, December 3, 2014

தேசிய விளையாட்டு :
மேற்கின் ஆதிக்கமும் வடக்கின் பின்னடைவும்



லங்கையில் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வரும் மாகாணங்களுக்கிடையிலான தேசிய விளையாட்டுப் போட்டிகளின் 40ஆவது அத்தியாயம் அண்மையில் வட மத்திய மாகாணத்தின் தலைநகராக விளங்கும் அனுராதபுரத்தில் நடைபெற்றுமுடிந்துள்ளது.
இந்த விளையாட்டுப் போட்டிகளில் ஒன்பது மாகாணங்களிலிருந்தும் வீர-வீராங்கனைகள் பங்கேற்றனர்.

GOOD BYE Hughes!

 கிரிக்கெட் உலகின் கண்ணீர் அஞ்சலியுடன் பிலிப் ஹியுஸின் இறுதிச்சடங்கு இன்று   (படங்கள் இணைப்பு)


Saturday, November 29, 2014

காலனின் விளையாட்டு!


எஸ்.ஜெயானந்தன்

லக விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு பரபரப்பான கட்டங்களைக் கடந்து ரசிகர்களுக்கு பெரும் விருந்தை எந்தளவுக்கு அளிக்கின்றனவோ, அந்தளவுக்கு பரிதாபகரமான சோக நிகழ்வுகளையும் பதியத் தவறுவதில்லை.
அந்தவகையில் ஆசியர்களான எமக்கு மிகவும் பரீட்சயமான விளையாட்டான கிரிக்கெட்டில் சோக நிகழ்வொன்று நடந்துள்ளது.

பிலிப் ஹியுஸ் தொடர்பான படங்கள்

Monday, November 24, 2014

இங்கிலாந்து - இலங்கை மோதல் ஒரு பார்வை


இப்போது திருப்தியா?

சிறந்த திட்டமிடல்கள், பயிற்சிகள் இன்றி அணியை அவசர அவசரமாக இந்தியாவுக்கு அனுப்பியதால் இலங்கைக் கிரிக்கெட்டுக்கு என்ன லாபம் கிடைத்துள்ளது? மாறாக இலங்கைக் கிரிக்கெட்டுக்குள் மேலும் மேலும் குழப்ப நிலை ஏற்படும் சந்தர்ப்பமே உருவாகியுள்ளது
லங்கைக் கிரிக்கெட் சபையின் உயரதிகாரிகளுக்கிடையில் நிகழும் பனிப்போர், வீரர்கள் - அதிகாரிகளுக்கிடையில் நிகழும் மறைமுக மோதல்

Monday, November 17, 2014

வழி மாறிய வீரர்

1964ஆம் அண்டு ஜனவரி மாதம் 28ஆம் திகதி இங்கிலாந்தின் கிளவுசெசரில்
பிறந்தவர்தான் டேவிட் வலென்ரைன் லாவ்ரென்ஸ்.
இவர் தனது 24ஆவது வயதில், 25 ஆகஸ்ட் 1988ஆம் ஆண்டு லோட்ஸில் ஆரம்பித்த இலங்கை அணிக்கு எதிரான  டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக பந்துவீச்சாளராகக் களமிறங்கினார்.
பின்னர் மூன்று வருடங்கள் கழிந்த நிலையில் 1991ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதியன்று வெலிங்டனில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு

பெண்கள் கிரிக்கெட்டுக்கு களங்கத்தை ஏற்படுத்திய ‘பாலியல் லஞ்சம்’

ண்மைய சில வாரங்களாக இலங்கைக் கிரிக்கெட்டுக்குள்  பரபரப்பை ஏற்படுத்தி பெரும் சர்ச்சையாக மாறியுள்ள விடயம், தேசிய பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதாயின் தேர்வாளர்களுக்கு வீராங்கனைகள் ‘பாலியல் ரீதியிலான லஞ்சம்’ கொடுக்கவேண்டும் என்பதாகும்.

Thursday, November 13, 2014

சட்டையை கழற்றி சுழற்றிய கங்குலி, ஷாம்பெயின் கேட்டு குடித்த சச்சின்! (சுயசரிதை பாகம்-2)

ச்சின் டெண்டுல்கர் சுயசரிதையான 'பிளேயிங் இட் மை வே' அறிமுகத்தின் இரண்டாம் பாகம் இது. இதில் முதல் முறை கேப்டன் ஆனது முதல் நாட்வெஸ்ட் தொடர் வெற்றி வரை அடக்கம்:

மேற்கு மண்டலம், மும்பை அணி ஆகியவற்றுக்கு ஏற்கனவே கேப்டனாக இருந்தபடியால், சச்சினுக்குக் கேப்டன் பொறுப்பு என்பது ஒன்றும் புதிதல்ல என்றாலும், இந்திய அணியின் தலைமைப்பொறுப்பு வித்தியாசமானது. கேப்டனின் ஒவ்வொரு நகர்வும் தலைப்புச்செய்தி ஆனது ஒருபுறம் என்றால், ஐந்து மண்டலங்களில் இருந்தும் தேர்வுக்குழு உறுப்பினர்கள் இருந்தபடியால், தான் விரும்பிய அணி கிடைக்காமல் சச்சின் திண்டாடிய தருணங்கள் சில உண்டு.

Tuesday, November 11, 2014

சைக்கிள் கேட்டு கதவில் தலையைவிட்ட சச்சின்! (சுயசரிதை பாகம்-1)

ச்சினின் சுயசரிதையான 'பிளேயிங் இட் மை வே' நூலைப்பற்றிய அறிமுகத்தின் முதல் பகுதி இது. முதல் பாகத்தில் 1996 உலகக்கோப்பை வரையிலும், அடுத்ததில் 2003 உலகக்கோப்பை வரையிலும், மூன்றாவது பாகத்தில் டெஸ்டில் நம்பர் ஒன் இடம் பெற்ற கதை வரையும், மிச்சம் இறுதி பாகத்திலும் இடம்பெறும்.

இந்த நூலை தன்னுடைய சக இந்தியர்களுக்கு சச்சின் சமர்ப்பணம் செய்திருக்கிறார். நூலின் மொழிநடை மிகவும் எளிமையாகவே இருக்கிறது. யாருக்காக எழுதுகிறோம் என்கிற தெளிவோடு நூலை கட்டமைத்து இருக்கிறார். நவம்பர் 16 அன்று முடிவுக்கு வந்த அவரின் கிரிக்கெட் பயணத்தின் இறுதிக்கணத்தில் "பாஜி, நீங்கள் இறுதியாக ஒரு முறை பிட்சுக்கு போகவேண்டும் என்பதை நினைவுபடுத்த சொன்னீர்கள் என்று கோலி சொல்வதோடு நூல் துவங்குகிறது. 

Monday, November 10, 2014

மிரட்டிய பாகிஸ்தானும் மிரண்டுபோன ஆஸியும்

அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தரம், 20 ஆண்டுகளின் பின்னர் உயர்வடைந்துள்ளதால் அந்த அணி குறித்த பேச்சே கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது பரபரப்பான விடயமாக மாறியுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த மாதம் பாகிஸ்தான்-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் மூன்று வகையான போட்டிகள் கடந்த மாதம் 5ஆம் திகதி முதல் இந்த மாதம் 3ஆம் திகதிவரை நடைபெற்றன.

Monday, November 3, 2014

தேசிய விளையாட்டு : மேற்கின் ஆதிக்கமும் வடக்கின் பின்னடைவும்


இலங்கையில் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வரும் மாகாணங்களுக் கிடையிலான தேசிய விளையாட்டுப் போட்டிகளின் 40ஆவது அத்தியாயம் அண்மையில் வட மத்திய மாகாணத்தின் தலைநகராக விளங்கும் அனுராதபுரத்தில் நடைபெற்றுமுடிந்துள்ளது.
இந்த விளையாட்டுப் போட்டிகளில் ஒன்பது மாகாணங்களிலிருந்தும் வீர-வீராங்கனைகள் பங்கேற்றனர்.

Sunday, November 2, 2014

இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் ஆட்டம்!



இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் முதலாவது ஆட்டம் இன்று பகல்-இரவு ஆட்டமாக இந்தியாவில் நடைபெறவுள்ளது.


இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, வீரர்களின் சம்பள ஒப்பந்தத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விளையாடிக்கொண்டிருந்த கிரிக்கெட் தொடரை பாதியில் நிறுத்திவிட்டு சென்றது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் இந்தியக் கிரிக்கெட் சபை, இலங்கை அணியுடன் விளையாடுவதற்கான விருப்பத்தைத் தெரிவித்திருந்தது.

Monday, October 27, 2014

அனுசரணைகள் கிடைத்தால்
சர்வதேச ரீதியிலும் சாதிக்கலாம்

கே.அனித்தா
ண்மையில் நடைபெற்றுமுடிந்த அகில இலங்கைப் பாடசாலை களுக்கிடையிலான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் வட மாகாணத்தைச் சேர்ந்த தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவியான கே.அனித்தா, பாடசாலை ரீதியில் சாதனை ஒன்றைப் படைத்ததுடன், தேசிய ரீதியில் திறந்த போட்டிகளில் கடற்படையைச் சேர்ந்த பி.ஏ.அனோமா கருணோவத்த நிகழ்த்திய சாதனையான 3.31 மீற்றர் என்ற உன்னத சாதனையையும் சமநிலைப்படுத்தியிருந்தார்.

Monday, October 20, 2014

சுழல் பந்துவீச்சை
அச்சுறுத்தும்
15'
உலகக் கிரிக்கெட்டில் அன்று முதல் இன்றுவரை பல்வேறு சர்ச்சைகளும் தடைகளும் நிகழ்த்தப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.
ஆனால், அண்மைக் காலமாக கிரிக்கெட்டில் ஜொலிக்கும் முன்னணிப் பந்துவீச்சாளர்கள், எதிர்பாராத வகையில் திடீரென தடைசெய்யப்படும் அளவுக்கு, முறை தவறி பந்தை எறிகின்றனர் என்ற விவகாரம் சூடு பிடித்துள்ளது.

Tuesday, October 7, 2014


இந்தியா-மே.இ.தீவுகள் 
மோதும் கிரிக்கெட் சமர்!

மூன்று வகைப் போட்டிகளிலும் பலப்பரீட்சை
ஒருநாள் தொடர் எட்டாம் திகதி ஆரம்பம்

ந்திய-மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் எட்டாம் திகதி முதல் அடுத்த மாதம் 19ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

Monday, September 22, 2014

உலகக் கிண்ணமா?


எஸ்.ஜெயானந்தன்

உலகக் கிண்ணமா?

கிரிக்கெட்.... இதுதான் இலங்கையரான எம் எல்லோருக்கும் தெரிந்த உலகக் கிண்ணத் தொடர் நடக்கும் விளையாட்டு. இது தவிர உதைபந்தாட்ட உலகக் கிண்ணம். இவைதான் நம்மில் பலருக்குத் தெரிந்த குழுநிலையாக சர்வதேச அணிகள் பங்கேற்கும் பெரிய தொடர்கள் ஆகும்.

Tuesday, September 16, 2014

சம்பியன்ஸ் லீக் இருபது-20


லகளவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் நாடுகளின் உள்ளூர் அணிகள் பங்கேற்கும் சம்பியன்ஸ் லீக் இருபது-20 பிரதான சுற்று எதிர்வரும் 17ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகின்றன.
2009ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்தொடர் இந்த ஆண்டு ஆறாவது கட்டத்தை அடைகின்றது.

Monday, September 8, 2014


எஸ்.ஜெயானந்தன்

வரலாற்று சிறப்புமிகு டெஸ்ட் வீரர்

கிரிக்கெட் போட்டிகளுள் மிகவும் பழமை வாய்ந்ததும் தனித்துவமிக்கதுமான ஒன்றாக விளங்குவது டெஸ்ட் போட்டிகள் ஆகும்.
இத்தகைய சிறப்பு மிக்க போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் ஒவ்வொருவரையும் காலம் மறப்பதில்லை. அதேபோல ஒவ்வொரு போட்டியிலும் பங்கேற்ற ஒவ்வொரு வீரர்களதும் செயற்பாடுகளையும் அவர்களுக்குரிய கௌரவங்களையும் சொல்லித்தான் தெரியவேண்டியதும் இல்லை.

Friday, August 22, 2014

மஹேல போல வருமா?

எஸ்.ஜெயானந்தன்

மஹேல போல வருமா?

லங்கைக் கிரிக்கெட் அணியின் நடப்புக் காலத்தின் இரு தூண்களாக விளங்குபவர்கள் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோரே.
இவர்கள் இருவரும் எதிர் அணி வீரர்களுக்கு எப்போதுமே சிம்ம சொப்பனமாக விளங்குவார்கள். இதனால் எதிரணிப் பந்துவீச்சாளர்கள் இவர்களை ‘பெவிலியன்’ அனுப்பும் வரை மூச்சுவிட முடியாத நிலை.

Sunday, August 17, 2014

17_08_2014 sunday thinakkural


எஸ்.ஜெயானந்தன்

கரப்பந்தாட்டத்தில் வெற்றி நடைபோடும்
இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம்

இவ்வருடம் 11 தொடர்களில் பங்கேற்று
 9 சம்பியன் பட்டங்களை வென்றது

யாழ். கரப்பந்தாட்டச் சங்கம் நடத்திய நடப்பு ஆண்டுக்கான கரப்பந்தாட்டத் தொடரின் சம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் இந்த ஆண்டுக்கான சம்பியன்  நாமத்தை ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம் சூடிக்கொண்டது.

Sunday, August 10, 2014

10_08_2014 sunday thinakkural


எஸ்.ஜெயானந்தன்

16 இல்
ஆரம்பம்
கூடைப்பந்தாட்டத்துக்கு
தயாராகும் அம்பாந்தோட்டை

ஆறாவது 'கால்டன்' கிண்ண கூடைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டி எதிர்வரும் 16ஆம் திகதி அம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கிறது.
'கால்டன்' கிண்ண கூடைப்பந்தாட்ட 'சம்பியன்ஷிப்' தொடர் இலங்கையின் முன்னணிக் கழகங்களுக்கிடையில் நடைபெறும் பிரபல்யமிக்க பிரீமியர் தொடராகும்.

Sunday, August 3, 2014

03_08_2014 sunday thinakkural




எஸ்.ஜெயானந்தன்

புரட்டி எடுக்கப்பட்ட
இலங்கை அணி

வெற்றிப்பயணத்துக்கு முட்டுக்கட்டை
சொந்த மண்ணில் நிகழ்ந்த பரிதாபம்

நடப்பு வருடத்தில் தொடர் வெற்றிகளைக் குவித்து வந்த இலங்கை அணிக்கு, அதன் சொந்த மண்ணில் வைத்து தென்னாபிரிக்க அணி தோல்வியைக் கொடுத்துள்ளமை பெரும் பரிதாபகரமாக அமைந்துள்ளது.

Sunday, July 27, 2014

27.07.2014 sunday thinakkural


எஸ்.ஜெயானந்தன்

அடித்தது லக்

உலக உதைபந்தாட்டத்தின் தற்போதைய முன்னணி நட்சத்திரங்களான ஆர்ஜென்ரீனாவின் மெஸ்ஸி, போர்த்துக்கல்லின் ரொனால்டோ, பிரேஸிலின் நெய்மர் ஆகியோர் மீது அண்மையில் நடைபெற்று முடிந்த உலகக் கிண்ணத் தொடரின்போது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. எனினும், ரொனால்டோவின் அணி முதல் சுற்றுடன் வெளியேற, பிரேஸில் அணி நெய்மர் மற்றும் அணித்தலைவரின்றி அரையிறுதியில் படுதோல்வியடைந்து வெளியேறியது. ஆர்ஜென்ரீனா மாத்திரமே இறுதிவரை முன்னேறியது.

Sunday, July 20, 2014

20_07_2014 sunday thinakkural


எஸ்.ஜெயானந்தன்

குறுகிய இடத்துக்குள் 
பந்தைக் கடத்துதல்
பிரேசிலில் நடைபெற்று முடிந்த ‘பிபா’வின் 20ஆவது உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடரில் ஆரம்பம் முதல் இறுதிவரை எந்தவொரு தோல்வியையும் சந்திக்காது தனது புது யுக்தியைக் கையாண்டு ஜேர்மனி அணி சம்பியன் பட்டத்தை வென்றமை அனைவரும் அறிந்ததே.
அதற்கேற்ப அந்த அணி வெற்றிக் கிண்ணத்துடன் தாய்நாடு திரும்பியபோது அங்கு வழங்கப்பட்ட வரவேற்பும் சொல்லிலடங்காததாகும்.

Wednesday, July 2, 2014

29_06_2014 sunday thinakkural


எஸ்.ஜெயானந்தன்

திரு திரு 
என விழித்து நின்றது இங்கிலாந்து
தர தர 
என இழுத்து வந்தது இலங்கை

இரண்டு மாதங்களாக இங்கிலாந்துக் கிரிக்கெட் அணிக்கு எதிராக பல்வேறுபட்ட கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்த இலங்கைக் கிரிக்கெட் அணி, எந்தவொரு தொடரையும் இங்கிலாந்து அணிக்கு விட்டுக்கொடுக்காமல் வழித்துத் துடைத்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளது.

Monday, June 23, 2014

22_06_2014 sunday thinakkural


எஸ்.ஜெயானந்தன்

முதல் ஆட்டம்!


20ஆவது உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடர் மிகுந்த பரபரப்புடன் பிரேஸிலில் நடைபெற்றுவருகின்றது. இந்தத் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் ஏதோ ஒரு வகையில் பரபரப்புக்குப் பஞ்சமில்லாத வகையிலேயே நகர்ந்துகொண்டிருக்கிறது.

Monday, June 9, 2014

08.06.2014 sunday thinakkural


எஸ்.ஜெயானந்தன்
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் குறித்த மீள் பார்வை (6)
கடந்த வாரத் தொடர்ச்சி...
க.ளைகட்டும் உதைவிழா

ரேஸிலில் எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடரை முன்னிட்டு இப்பத்தியில் கடந்த சில வாரங்களாக கடந்தகால உலகக் கிண்ணத் தொடர்களின் முக்கிய அம்சங்கள் சிலவற்றைப் பார்த்தோம். இனி இம்முறை நடைபெறவுள்ள 20ஆவது உலகக் கிண்ணத் தொடர் குறித்து இங்கு சிறிது ஆராய்வோம்.

Monday, June 2, 2014

01.06.2014 sunday thinakkural


எஸ்.ஜெயானந்தன்
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் குறித்த மீள் பார்வை (5)

கடந்த வாரத் தொடர்ச்சி...

கணிப்பில் கலக்கிய போல்

கடந்தவாரம் இப்பத்தியில் உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடர்களில் தங்கப்பந்து வென்ற வீரர்கள் குறித்து விரிவாகப் பார்த்தோம்.
இம்முறை தங்கப்பந்து மற்றும் தங்கக் கையுறைகளை வென்ற வீரர்கள் குறித்த விவரங்களை இங்கே விரிவாக ஆராய முடியவில்லை. எனினும், அதற்குப் பதிலாக தெளிவாக விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் வரைவாக கீழே தரப்பட்டுள்ளது.

Monday, May 26, 2014

எஸ்.ஜெயானந்தன்
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் குறித்த மீள் பார்வை (4)

கடந்த வாரத் தொடர்ச்சி...
முதலாவது தங்கப்பந்தை 
வென்ற நசாஸி

கடந்த தொடர்களில் ஒவ்வொரு உலகக் கிண்ணத் தொடர்களினதும் இறுதியாட்டங்களில் பங்கேற்ற அணிகள் குறித்தும் கிண்ணத்தைக் கைப்பற்றிய அணிகள் குறித்தும் பார்த்தோம். இனி இப்பத்தியில் அதே உலகக் கிண்ணப் போட்டிகளில் பெறப்பட்ட ஏனைய வெற்றிகள் குறித்துப் பார்ப்போம்.
உலகக் கிண்ணப் போட்டிகளில் இறுதியாட்டத்தில் வெல்கின்ற அணிக்குக் கிடைக்கின்ற விருதுகளைப் போலவே, அத்தொடரில் விளையாடும் வீரர்களுக்கு வழங்கப்படும் தனிப்பட்ட திறமைகளுக்கான விருதுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

எஸ்.ஜெயானந்தன்

தேடிவந்த பதவி

இலங்கைக் கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் சிறந்த வீரர்கள் பல உருவாகியுள்ளனர் - உருவாகிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், சிறந்த ஒரு பயிற்சியாளராக இலங்கையிலிருந்து எவரும் பிரகாசித்ததாகத் தகவல் இல்லை.

Monday, May 19, 2014

எஸ்.ஜெயானந்தன்
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் குறித்த மீள் பார்வை (3)

கடந்த வாரத் தொடர்ச்சி...

1986ஆம் ஆண்டு இரண்டாவது தடவையாகவும் உலகக் கிண்ணத் தொடரை நடத்தும் வாய்ப்பை மெக்ஸிக்கோ பெற்றது. இத்தொடரின் இறுதிப் போட்டியில் கடும் போட்டிகளுக்கு மத்தியில் முன்னேறிய ஆர்ஜென்ரீனா - மேற்கு ஜேர்மனி அணிகள் மோதின.

எஸ்.ஜெயானந்தன்
இருபது-20 தொடருடன் ஆரம்பிக்கும்
இலங்கை-இங்கிலாந்துத் தொடர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் அயர்லாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான இலங்கை அணி இங்கிலாந்தில் முகாமிட்டு பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது.

Monday, May 12, 2014


எஸ்.ஜெயானந்தன்

சூடு பிடித்த ஆட்டம்

பரபரப்புடன் இந்தியாவில் தற்போது நிலைகொண்டுள்ள ஏழாவது இருபது-20 ஐ.பி.எல். சூறாவளி ஆட்டம், மிகுந்த சுவாரஷ்யங்களுடன் வீறுநடைபோட்டுக்கொண்டிருக்கிறது.
எஸ்.ஜெயானந்தன்
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் குறித்த மீள் பார்வை (2)

கடந்த வாரத் தொடர்ச்சி...
ஐந்தாவது உலகக் கிண்ணத் தொடர் 1954ஆம் ஆண்டு சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதியாட்டத்தில் ஹங்கேரி அணியை எதிர்கொண்ட மேற்கு ஜேர்மன் அணி, 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று முதல் முறையாகச் சம்பியன் பட்டம் வென்றது.

Monday, May 5, 2014

எஸ்.ஜெயானந்தன்
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் குறித்த மீள் பார்வை (1)

உலக விளையாட்டுக்களில் அதிகளவில் ரசிகர்களைக் கொண்ட போட்டி என்றால் அது உதைபந்தாட்டமாகத்தான் இருக்கிறது. அந்தளவுக்கு உதைபந்தாட்டத்தின் மீது அதீத ஆர்வம் உடையவர்களாக உலக மக்கள் உள்ளனர்.
எஸ்.ஜெயானந்தன்
அயர்லாந்துடன் கிரிக்கெட் ஆடும்
இரண்டாம் தர இலங்கை அணி
இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கைக் கிரிக்கெட் அணி, அதற்குத் தம்மைத் தயார்படுத்தும் விதமான ஆட்டத்தில் பங்கேற்பதற்காக அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அயர்லாந்து சென்றுள்ளது.

Monday, April 28, 2014

எஸ்.ஜெயானந்தன்


மூடிய அறைக்குள் பேசுதல்

இலங்கைக் கிரிக்கெட் அணி அண்மைக்காலமாகப் பல வெற்றிகளைக் குவித்து வருகிறது. அதற்கு வீரர்களின் திறமை, அனுபவம் மற்றும் ஒன்றுபட்ட ஆற்றல் வெளிப்பாடு என்பவற்றுடன் குறித்த வீரர்களுக்குத் தகுந்தமுறையில் பயிற்சியளிக்கும் பயிற்சியாளர்களுமே காரண கர்த்தாக்களாக அமைகின்றனர். இவைதவிர, வேறெந்தக் காரணங்களையும் நாம் பெரியளவில் குறிப்பிட்டுக்கூறுமளவுக்கு இல்லை.

Monday, April 21, 2014

எஸ்.ஜெயானந்தன்

பணம் கொழிக்கும்
பரபரப்பு மிகு தொடர்

உலகளவில் நடைபெற்றுவரும் கிரிக்கெட் போட்டிகளைப் போலவே ரசிகர்களைத் தன்னகத்தே கவர்ந்துள்ள உள்ளூர் அணிகளுக்கிடையில் நடைபெறும் போட்டிதான் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) இருபதுd20 போட்டி. இதில் புரளும் கோடி ரூபாய்கள்தான் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆச்சரியமிகுந்ததாகும்.

Total Pageviews